Friday, July 24, 2015

2050-ல் மேலோங்கப்போவது இஸ்லாமே..!!


சென்ற வாரம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர், அசோக் சிங்கால் 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுமையான ஹிந்து நாடாகும் என்றும், 2050-ஆம் ஆண்டு உலகமே ஹிந்து பெரும்பான்மையாகும் என்ற ஓர் வன்மம் நிறைந்த நச்சுக்கருத்தினை தெரிவித்தார்.



உண்மையில், இஸ்லாமியப் பார்வையில் மற்றும் பல்வேரும் ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளியியல் தகவல்களின்படி உலகில் வேகாமாக வளர்ந்தும் மிக அதிகமாக கொள்கை உறுதிகொண்ட மக்களை கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை நாம் அறியலாம்.



நபி (ஸல்) அறிவித்ததைப் போன்றும் இறைவன் தன் திருமறையில் கூறும்போதும் எவ்வாறு முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதன் மூலமும் இஸ்லாமிய சமூகம் எப்படி இந்த உலகத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 24, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Saturday, July 18, 2015

ஈகைப் பெருநாள் சிறப்புரை-2015..!!

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மஸ்ஜிதுல் இஹ்ஸான், மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா இனைந்து கரும்புக்கடையிலுள்ள இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில் இந்த வருட (2015) ஈதுல் ஃபித்ர் தொழுகைக்கு சிறப்பாக நடைபெற்றது.



ஈதுத் தொழுகைக்குப்பின் மஸ்ஜிதுல் இஹ்ஸானின் இமாம் மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளலருமான மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.


நாள்: ஜூலை 18, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/JmOGI4MD

இபாதத்தும் இறைக்கருணையும்..!!



இறைவன் மனிதவாழ்வின் அத்துனை பாகங்களையும் இணைத்து தனது தீன் என்ற வாழ்வியல் முறையை தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் உபதேசித்துள்ளான்.

இறைவன் வழங்கியுள்ள வாழ்வியல் கட்டளைகள் நமது வழிபாடுகளில் மட்டுமல்லாது நமது வாழ்வியலின் அத்துனை அம்சங்களையும் செம்மைப்படுத்தி ஒழுக்கவிளுமியங்களின் சிகரத்தில் இறைநம்பிக்கையாளனை மாற்றுவதே இபாதத் என்ற இறைவனுக்குக் கட்டுப்படும் மனப்பான்மையாகும்.

மனிதன் எதனை இபாதத் என்று கருதி தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுவருகிறானோ அதனை விடவும் இறுதித்தீர்ப்பு நாளில் இறைவனது உயர்ந்த கருணையால் மட்டுமே அவன் சொர்க்கம் புக முடியும் என்பதையும், நமது ரமளான் மாத இபாதத்துகளை முழுவதும் சீர்குலைக்கும் விதாமாக நமது நடவடிக்கை அமையக்கூடாது என்பதனையும், இறைவனின் கருணை வேண்டியும் நமது இபாதத்துகளை அவன் கருணை கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் முழு முனைப்பு காட்டவேண்டும் என்பதையும் விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 17, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Sunday, July 12, 2015

சமநிலை (தவறிய) சமுதாயம்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் 25-ஆம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.




இஸ்லாம் வரையறுக்கும் மற்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்த முஸ்லிம் சமூகம் சமநிலை மேலோங்கியதாகவும் உண்மைக்கு சான்று பகரக்கூடிய உன்னத சமூகமாக திகழ்ந்தது.

இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் சமநிலப்பாட்டை விட்டு இரு பெரும் தீவிரப்போக்கில் சிக்கித்தவிக்கும் சூழல் நிலவுகிறது. இஸ்லாமிய மார்க்கம் கூறும் அந்த சமநிலை தன்மை குறித்தும், முஸ்லிம்கள் எவ்வாறு தங்களது பார்வைகளையும் சிந்தனைகளையும் இந்த தன்மையின்பக்கம் சீர்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் இந்த இஸ்லாமிய வாழ்வியலின் சான்றுகளாக விளங்கவேண்டிய கட்டாயத்தை விளக்கும் சிறப்புரை.

தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

நாள்: ஜூலை 12, 2015 (25)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/I0M2I5MT


Friday, July 10, 2015

நமக்கும் குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருக்கிறது..?

ரமளான் மாதம் நம்மை வெகுவேகமாக கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த மாதம் எதனால் புனிதப்படுத்தப்பட்டது என்பதை இறைவன் தனது திருமறையில் கூறும்போது குர்ஆன் இறக்கியருளப்பட்டதனாலேயே இந்த மாதத்திற்கு சிறப்பு என்று கூறுவதன் மூலம் ரமளான் மாத நோன்பிற்கு மூல காரணியாக குர்ஆன் விளங்குகிறது என்பது விளங்குகிறது.



முஸ்லிம் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம், நமக்கும் குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை சற்றே சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணமிது.

இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியான இஸ்லாத்தின் கொள்கை நெறிகளையும் இறை கட்டளைகளையும் தாங்கிய குர்ஆனை நாம் எவ்வாறு விளங்கிக்கொண்டு நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 10, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Saturday, July 4, 2015

இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு..!!



சென்ற வாரம் இறையச்சத்தின் வாயிலாக தௌபா என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல் என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனைக் குறித்து தெரிந்துகொண்டோம்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடியான் இறைவனிடம் எவ்வாறு தனது பாவங்களுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்பதனைக் குறித்தும். இஸ்லாமிய பாவமன்னிப்பு கோட்பாடு எவ்வாறு மற்ற எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்தும் தனித்தன்மை பெறுகிறது. இந்தக் கோட்பாடு வெறும் சித்தாந்த ரீதியில் இல்லாமல் அறிவுபூர்வமான ஒன்றாகவும் அமைந்துள்ளது என்பதனை விளக்கும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் மூன்றாம் ஜுமுஆ சிறப்புரையின் தொடரின் மூன்றாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 07/03/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, June 26, 2015

ரமளான் வழங்கும் பாவமன்னிப்பும் புது வாழ்வும்..!!



சென்ற வார ஜூமுஆ உரையின் வாயிலாக ரமாளான் மாதம் நோன்பு நோர்ப்பதன் மூலம் மனித தக்வவினை பெறக்கூடும் என்று இறைவன் கூறுவதன் மூலம், இறையச்சத்தை நம் வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்றாக இணைக்கும் பாலமாக ரமாளான் அமைந்துள்ளது என்பதைக் குறித்துக் கேட்டோம்.



சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் இறையச்சத்தின் வாயிலாக தௌபா என்ற உளப்பூர்வமாக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டுதல் என்பதன் மூலம் மனிதன் எவ்வாறு தனது கடந்த கால வாழ்வில் தான் செய்த அனைத்து பாவங்களை விட்டும் மீண்டு உளப்பூர்வமாக பாவமன்னிப்பு தேடும்போது, அவனது வாழ்வே மீண்டும் பிறந்த குழந்தையை போன்று அப்பழுக்கற்ற நிலையை அடைகிறது என்பதனை தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் இரண்டாம் ஜுமுஆ சிறப்புரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/26/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Monday, June 22, 2015

ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் நான்காம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ரமாளான் மாதத்தில் இறைவனது அருளுக்கும் கருணைக்கும் யாருக்கு சென்றடைகிறது, மற்றும் இந்த மாதத்தினை அடைந்தும் இந்த மாபெரும் அருள் மழையினை தவரவிடுகிரவர்களைக் குறித்து விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமளானின் அருள் வளங்கள் யாருக்கு?

நாள்: 21/06/15 (04)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Sunday, June 21, 2015

ரமாளான் அருளும் மன்னிப்பு..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் மூன்றாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ரமாளான் மாதத்தில் இறைவன் தனது அடியார்களின் பாவத்தை எவ்வாறு மன்னித்து அவர்களை தனது அருளுக்கும் கருணைக்கும் உகந்தவர்களாக மாற்றுகிறான் என்பதை விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமாளான் அருளும் மன்னிப்பு

நாள்: 20/06/15 (03)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Friday, June 19, 2015

ரமளானும் நம் குர்ஆனிய தொடர்பும்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் இரண்டாம் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.



ஒவ்வொரு ஆண்டு ரமாளான் மாதத்திலும் நம்முடைய குர்ஆனுடனான தொடர்பு எவ்வாறு இருக்கிறது, அது உண்மையில் எப்படி அமையவேண்டும் என்பதை விளக்கும் சிற்றுரை.

தலைப்பு: ரமளானும் நம் குர்ஆனிய தொடர்பும்

நாள்: 19/06/15 (02)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



தக்வா - நோன்பு தரும் பயிற்சி - பாகம் 1..!!

(உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். அல்-குர்ஆன் (49:13))

இறைவன் தனது திருமறையில் ரமாளான் மாத நோன்பினைக் குறித்த முதல் வசனம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு இறக்கியருளினான். அவ்வசனம் நோன்பின் மூலம் மனிதன் எதனை அடையவேண்டும் என்பதை விரிவாக இவ்வாறு கூறுகிறது.

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். அல்-குர்ஆன் (2:183)

தக்வா என்ற இறையச்சம் என்பது தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற வழிபாடுகளில் போன்றவற்றில் மட்டுமல்லாமல் மனிதனின் அத்துனை வாழ்வியல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை திருமறையின் சூரா அல்-அன்ஆமில் 151 முதல் 153 வசனங்கள் மூலம் இறைவன் இறையச்சமுள்ளவர்களுக்கு வழங்கியுள்ள நிபந்தனைகள் குறித்து கூறுவதன் மூலம் விளங்கமுடியும்.

ஓர் மனிதனை தவாறான பாதையில் இருந்து நேரிய நல்வழியில் உறுதியுடன் நிலைபெற வைப்பதே அவனது தக்வா என்ற இறையச்சத்தின் அடையாளம்.

தக்வவினைக் குறித்தும் நோன்பின் மூலம் அந்த தக்வாவினை அடைவதைக் குறித்து தெளிவுபடுத்தும் 2015-ஆம் ஆண்டின் ரமளானின் முதல் ஜுமுஆவில் நிகழ்த்தப்பட்ட தொடர் ஜுமுஆ உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/19/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Thursday, June 18, 2015

மீண்டும் புதிய வாழ்வு..!!



கோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் இந்த வருட (2015) ரமளானின் முதல் நாள் இரவு தொழுகைக்குப் பின் நிகழ்த்தப்பட்ட சிற்றுரை.

தலைப்பு: மீண்டும் புதிய வாழ்வு

நாள்: 18/06/15 (01)

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, June 12, 2015

உலகளாவிய சகோதரத்துவம் & நபிவழியின் ஒளியில் வாழ்வு..!!



இன்று நபிவழி என்ற சொல்லுக்கு குறுகிய பொருள் கொண்டு வணக்கவழிபாடுகள், திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற ஒரு சில காரியங்களில் மட்டும் நபிமொழியினைப் பேணுவதும். மற்ற வாழ்வியல் விவகாரங்களில் அதனைக்குறித்த சிந்தனையில்லாமல் இருப்பதும் நம் சமூகத்தில் காணப்படுகிறது.

நபிவழி என்பது இன்றளவில் பேசப்படும் ஒன்றாக இருக்கிறதே தவிர சரியாக பேணப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

நபிவழி என்ற பெயரில் இன்றளவும் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும், ஒருவர் மற்றொருவரை வழிகெட்டவர் என்றும் நிராகரிப்பவர் என்றும் கூறி அவரை இஸ்லாமிய வட்டத்தில் இருந்து விளக்க முற்படுவதும் அன்றாட நிகழ்வாக இருந்துவரும் நிலையில், நபிவழி என்பது மனித இனத்தை ஒன்றுதிரட்டவும் அதன் வாழ்வியல் நெறியினை இறைவழிகாட்டலின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு மேன்பட்ட சமூகமாக மறுமலர்ச்சி பெறுவதே நபிவழியின் ஒட்டுமொத்தக் குறிக்கோள் என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/12/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, June 5, 2015

உலகளாவிய சகோதரத்துவம் - இஸ்லாமியப் பார்வையும் படிப்பினைகளும் - பகுதி 1..!!

இன்றைய உலகளாவிய சூழலில் மக்களிடையே தோன்றும் கேள்விகளில் சில,

-          இஸ்லாம் இந்த உலகில் வந்தது எதற்க்காக?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கக்கூடிய செய்தி என்ன?
-          இஸ்லாம் இந்த உலகிற்கு வந்ததால் யாருக்கு என்ன லாபம்?




இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் மனிதகுல ஒருங்கினைப்பும், உலகளாவிய சகோதரத்துவமும் என்பதை நபி (ஸல்) அவர்களின் மக்கத்து வாழ்கையின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் மூலம் பதிலாகப் பெறமுடிகிறது..

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அமர் பின் அபஸா (ரலி) என்ற ஒருவர் சந்திக்கிறார். அது நபிகளாருக்கு நுபுவ்வத்தின் ஆரம்பகட்டமாக இருந்தது. அப்போது நபிகளாரை (ஸல்) நோக்கி நான் கேட்டேன் நீங்கள் யார்?. அதற்க்கு அவர்கள் நான் அகிலத்தின் அதிபதியால் மக்களிடம் அனுப்பப்பட்ட நபி என்று கூறினார்கள்.

இதற்க்கு திரும்பவும் அமர் (ரலி) அவர்கள் நபி என்றால்? என்று கேட்க்க. அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைத் இந்த உலக மக்களுக்கு தூதராக அனுப்பிவைத்திருக்கிறான் என்று சொன்னதும் திரும்பவும் அம்ர் (ரலி) கேட்டார்கள் அப்படியானால் என்ன செய்தியை கொடுத்து அல்லாஹ் உங்களை தூதராக அனுப்பியிருக்கிறான்? என்று.

அதற்க்கு, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்ன தூதராக அனுப்பியது மனிதகுலத்தை ஒன்றிணைக்க வேண்டியும், சிலைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டு இணைவைப்பு முழுவதுமாக ஒழிக்கப்பட்டு தவ்ஹீத் நிலைநாட்டப்படவேண்டும் என்று கூறினார்கள்.

இன்றைய சூழலில் கருத்துவேறுபாடுகளின் காரணமாக ஓர் முஸ்லிம் இன்னொருவர் மீது வசைமாறிப் பொழிவதையும் பல்வேறு வகையில் அவமதிக்கப்படுவதும் சாதாரண நிகழ்வாக இருந்துவரும் நிலையில், ஓர் முஸ்லிமின் உயிரும் கௌரவமும் பேணிப்பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வோர் முஸ்லிமிற்கும் இருக்கிறது என்பதை விளக்கும் ஜூமுஆ தொடர் உரையின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 06/05/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Friday, May 29, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் - பாகம் 2.!!


ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும் என்பதையும் நயவஞ்சகத்தின் மூன்று விதமான வெளிப்பாடுகள் குறித்தும் கடந்தவாரம் சொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக...

இறைவன் தன் திருமறையில் ஓர் முஸ்லிமின் கடமையாகக் குறிப்பிடுவது..

இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். அல்குர்ஆன் (3:110)

இன்றைய இஸ்லாமிய சமூகம் எவ்வாறு இந்த சத்திய மார்க்கத்தினை சாட்சி பகர்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதனைக்குறித்து அறியாதவர்களுக்கு இந்த நேர்வழியின் பால் அழைப்புவிடுப்பதும் ஒவ்வோர் முஸ்லிமிற்கும் தார்மீகக் கடமை என்று தெரிந்திருந்தும் அதனக்குறித்த செயல்பாடுகளில் அலட்சியாமாக இன்றைய முஸ்லிம் சமூகம் இருப்பதும், நன்மையை ஏவி தீமைகளைக் களைவதில் உலக மக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய முஸ்லிம் சமூகம் அதனக்குரித்த ஞானம் இல்லாமல் அசட்டையாக இருப்பதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே..



சென்றவாரம் உரையின் முடிவில் புரோட்டா குறித்த சிந்தனைய அறிந்துவருமாறு அறிவுருத்தப்பட்டதன் நோக்கம்...எவ்வாறு வெள்ளையர் ஆட்சி காலத்தில் பெரும் வரட்சி மற்றும் பட்டினியை போக்க எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பையாக கொட்டப்பட்ட மைதா மாவை உணவாக உன்ன ஆரம்பித்தார்களோ, ஆனால் இன்று பட்டினி என்ற ஒன்று இல்லாமல்ப்போன காலத்திலும் இன்னமும் புரோட்டாவை நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒன்றாக இன்னமும் வைத்திருக்கிறோமோ, அதனைப்போலவே இஸ்லாமிய கயிற்றில் அதனுடைய மாண்புகள் என்பது இழைகளாக இருக்கிறது.

இன்று முஸ்லிம் சமூகத்தில் ஒவ்வோர் இஸ்லாமிய இழைகளாக அறுந்து வரும் சூழலில், அனைவரும் மீதமுள்ள இழைகளை இருக்க பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கின்றோமே தவிர அருந்துபோன மாண்புகளை திரும்ப இஸ்லாம் என்ற கயிற்றில் பிணைக்கத் தவறியதும் செயல்களின் நயவஞ்சகத்தனமே என்பதனை விளக்கும் ஜூமுஆ சிறப்புரையின் இரண்டாம் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/29/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

http://yourlisten.com/jihkovai/052915-part-2

Friday, May 22, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் -பாகம் 1..!!




ஓர் மனிதன் முஸ்லிமாக வாழ முர்ப்படும்போது அவனது கொள்கையும் செயல்களும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதற்கே அமையவேண்டும்.

ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும்.



நயவஞ்சகத்தனம் இரண்டு வகைப்படுத்தப்படுகிறது, ஒன்று கொள்கை நயவஞ்சகத்தனம் மற்றொன்று செயல்களின் நயவஞ்சகத்தனம்.

ஓர் முஸ்லிம் தனது செயல்களின் பலன்களை மறுமையில் பெற அவனைது செயல்கள் அவன் கொண்ட கொள்கைக்கு சான்று பகரக்கூடியதாய் அமையவேண்டும். அப்படி மனிதனின் செயல்பாடுகளை அலசி அவைகளிலுள்ள நயவஞ்சகத்தனத்தை விளங்கி அந்தச்செயல்களிலிருந்து விலகக்கூடியவர்களை, நம்மை நாமே சுயஆய்வு செய்ய உதவும் தொடர் ஜூமுஆ சிறப்புரைகளின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/22/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, May 15, 2015

மாணவர் தற்கொலைகளும் அதன் தீர்வும்..!!





+2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் மற்றும் 10-ஆம் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சமீக காலங்களில் தேர்வில் தோல்வி மற்றும் தான் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்தினால் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும்
மாணவ-மாணவியரின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டேபோகிறது.




மாணவ-மாணவியரின் தற்கொலைகளுக்கு மூலக்காரனிகளாக தற்கால பயனில்லாக் கல்வி முறை, தனியார் ஆதிக்கம், கல்வியிலும் நுகர்வியல் கலாச்சாரம், பெற்றோர்களின் அழுத்தம், ஊடகங்களின் தேவைக்கதிகமான விளம்பரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


தற்காலச்சூழலில் முஸ்லிம்களாய் மற்றும் பெற்றோர்களாய் நாம் குழந்தைகளின் நலனிலும் அவர்களது கல்வியிலும் எவ்வாறு பங்களிப்பினை தரவேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/15/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


Saturday, May 9, 2015

மரணம் - வாழ்வின் மௌன உபதேசி..!!




நபி (ஸல்) அவர்கள் ஓர்நாள் தனது தோழர்களுடன் அமர்ந்துகொண்டிருக்கும்போது இரும்பு துருப்பிடிப்பதைப்போல மனிதனின் இதயம் துருப்பிடிக்கின்றது என்று கூறினார்கள். அதற்க்கு நபித்தோழர்கள் வினவினார்கள் அப்படியானால் அந்த துருவை நீக்குவதற்கான மருந்து எது? என்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் இதயத்தில் ஏற்ப்படும் துருவை நீக்க இரண்டு வழிகள் இருக்கின்றது, ஒன்று மரணத்தை குறித்த சிந்தனையை எப்போதும் மேற்கொள்வது இன்னொன்று திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவது என்று கூறினார்கள்.

மனிதன் தனது வாழ்நாளில் பெரும்பாலும் தன் மனோயிச்சைக்குப்பின் சென்று உலகியல் வளங்களுக்காக தனது வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்துக்கொண்டிருக்கிறான். ஆனால், அவனது வாழ்வின் முடிவும் அதனைத்தொடர்ந்து வரவுள்ள மறுமைப் பயணத்திற்கான ஏற்ப்பாட்டினக்குறித்து அலட்சியாமாக இருக்கிறான்.

இன்று மனித சமுதாயத்தில் மது, விபச்சாரம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என எல்லா சீர்கேடும் மலிந்து காணப்படுவதன் முக்கிய காரணம் மரணத்தை குறித்தும், மறுமையைக் குறித்தும், மன்னரை வாழ்வினைக் குறித்த சிந்தனையை மறந்ததன் விளைவே என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/08/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

Friday, May 1, 2015

உழைப்பும் இறைவழிபாடும்..!!

திருக்குர்ஆனின் 62-ம் அத்தியாயம் சூரா அல்-ஜூமுஆவின்
9 முதல் 11 வசனங்கள் இந்த வாழ்வில் மனித இறைவனை வழிபடுவதற்கும் மற்றும் உலக வளங்களை பெற்று அனுபவிப்பதற்கும் சமநிலை பேணுவதைக்குறித்து கூறுகிறது.





يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِىَ لِلصَّلٰوةِ مِنۡ يَّوۡمِ الۡجُمُعَةِ فَاسۡعَوۡا اِلٰى ذِكۡرِ اللّٰهِ وَذَرُوا الۡبَيۡعَ ؕ ذٰ لِكُمۡ خَيۡرٌ لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿62:9﴾
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوۡا فِى الۡاَرۡضِ وَابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَاذۡكُرُوا اللّٰهَ كَثِيۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ ﴿62:10﴾
وَاِذَا رَاَوۡا تِجَارَةً اَوۡ لَهۡوَا۟ اۨنْفَضُّوۡۤا اِلَيۡهَا وَتَرَكُوۡكَ قَآٮِٕمًا ؕ قُلۡ مَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ مِّنَ اللَّهۡوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَيۡرُ الرّٰزِقِيۡنَ ﴿62:11﴾

62:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!

62:10 பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.

62:11 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.

மனிதன் தன் வாழ்வில் இறைவனின் நினைவுகூருதல் என்ற வணக்கவழிபாடுகளுடன் தன் வளங்களை பெருக்கிக்கொள்ளவும் உழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிடுவதை பார்க்கலாம்.

ஆனால், இன்றைய சமுதாயமோ இந்த இரண்டில் எதாவது ஒன்றை மட்டுமே நேசித்து அதில் தீவிரப்போக்கும் இன்னொன்றின்பால் அலட்சியப்போக்கை மேற்கொள்வதை நாம் பார்க்கலாம்.

ஓர் முஸ்லிம் இறைவன் காட்டிய நெறியின்படி உழைத்து அதன் மூலம் பெரும் வழங்களை அனுபவிப்பது மட்டுமின்றி, இறைவனது மார்கத்தை நிலைநாட்ட தன்னுடைய உழைப்பையும் வணிகத்தையும் ஓர் கருவியாக பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு ஓர் முன்மாதிரியாய் திகழவேண்டும்.

உழைப்பவர்களுக்கு என்றுமே உழைப்பாளர் தினம் தான்...!

இஸ்லாமிய பார்வையில் உழைப்பைக் குறித்தும், உழைப்பாளர்கள் குறித்துமான ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/01/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்