ரமளான் மாதம் நம்மை வெகுவேகமாக கடந்து
சென்றுகொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த மாதம் எதனால் புனிதப்படுத்தப்பட்டது
என்பதை இறைவன் தனது திருமறையில் கூறும்போது “குர்ஆன்
இறக்கியருளப்பட்டதனாலேயே இந்த மாதத்திற்கு சிறப்பு” என்று கூறுவதன்
மூலம் ரமளான் மாத நோன்பிற்கு மூல காரணியாக குர்ஆன் விளங்குகிறது என்பது
விளங்குகிறது.
முஸ்லிம் என்று நம்மை
அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம், நமக்கும் குர்ஆனுக்கும் இடையிலான தொடர்பு எப்படி
இருக்கிறது என்பதை சற்றே சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணமிது.
இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியான
இஸ்லாத்தின் கொள்கை நெறிகளையும் இறை கட்டளைகளையும் தாங்கிய குர்ஆனை நாம் எவ்வாறு
விளங்கிக்கொண்டு நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ
சிறப்புரை.
ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜூலை 10, 2015
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை
சொடுக்கவும்
No comments:
Post a Comment