நபி (ஸல்) அவர்கள் ஓர்நாள் தனது
தோழர்களுடன் அமர்ந்துகொண்டிருக்கும்போது “இரும்பு
துருப்பிடிப்பதைப்போல மனிதனின் இதயம் துருப்பிடிக்கின்றது” என்று கூறினார்கள். அதற்க்கு நபித்தோழர்கள் வினவினார்கள் “அப்படியானால் அந்த துருவை நீக்குவதற்கான மருந்து எது?” என்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் “இதயத்தில்
ஏற்ப்படும் துருவை நீக்க இரண்டு வழிகள் இருக்கின்றது, ஒன்று மரணத்தை குறித்த
சிந்தனையை எப்போதும் மேற்கொள்வது இன்னொன்று திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவது” என்று கூறினார்கள்.
மனிதன் தனது வாழ்நாளில் பெரும்பாலும் தன்
மனோயிச்சைக்குப்பின் சென்று உலகியல் வளங்களுக்காக தனது வாழ்வின் பெரும்பகுதியை
செலவழித்துக்கொண்டிருக்கிறான். ஆனால், அவனது வாழ்வின் முடிவும் அதனைத்தொடர்ந்து
வரவுள்ள மறுமைப் பயணத்திற்கான ஏற்ப்பாட்டினக்குறித்து அலட்சியாமாக இருக்கிறான்.
இன்று மனித சமுதாயத்தில் மது,
விபச்சாரம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் என எல்லா
சீர்கேடும் மலிந்து காணப்படுவதன் முக்கிய காரணம் மரணத்தை குறித்தும், மறுமையைக்
குறித்தும், மன்னரை வாழ்வினைக் குறித்த சிந்தனையை மறந்ததன் விளைவே என்பதை விளக்கும்
ஜூமுஆ சிறப்புரை.
ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: 05/08/15
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
No comments:
Post a Comment